/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது
/
மதுபாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது
ADDED : செப் 10, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு : புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கிய மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வெள்ளக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மாயவன் மனைவி ஆண்டாள்,65; என்பவர் தனது வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ஆண்டாளை கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.