ADDED : செப் 29, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பெலாந்துறையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூதாட்டியிடம் விசாரித்தனர்.
இதில், பெலாந்துறை கொண்டித்தெரு, ரவிச்சந்திரன் மனைவி அலமேலு, 50; என்பதும், மதுபாட்டில் விற்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து, அலமேலுவை கைது செய்தனர்.