ADDED : அக் 05, 2025 03:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று கோ.பவழங்குடி பகுததியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு மனைவி பன்னீர்செல்வி, 62; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, பன்னீர்செல்வியை கைது செய்து, 17 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.