ADDED : அக் 16, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்
குறிஞ்சிப்பாடி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையிலான போலீசார் நேற்று காலை, குறிஞ்சிப்பாடி சுற்றுப்பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது காட்டுநாயக்கன் தெரு பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
மதுபாட்டில் விற்பனை செய்த தனலட்சுமி, 60; என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்குப் பதிந்த போலீசார், 4 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.