ADDED : ஆக 21, 2025 10:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு; நடந்து சென்ற மூதாட்டி பைக் மோதி இறந்தார்.
பாலுார், சன்னியாசிப்பேட்டை காந்தி நகரை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி சின்னபொண்ணு, 80; இவர், காந்தி நகர் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்ற போது பைக் மோதி நிற்காமல் சென்றது.
இதில் பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு முருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.