ADDED : மார் 15, 2025 09:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி,; பைக்கில் இருந்து கீழே விழுந்த முதாட்டி இறந்தார்.
பண்ருட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் அர்ஜூனன் மனைவி சந்திரலேகா, 70; சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட இவர், நேற்று பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருந்து தனது பேரன் சண்முகம் என்பவருடன், பைக்கில் வீட்டிற்கு வந்தார். பண்ருட்டி கெடிலம் ஆற்று பாலம் அருகில் வந்தபோது, சந்திரலேகா நிலைத்தடுமாறி கிழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.