ADDED : ஜன 30, 2024 06:20 AM
அ நிறம் | அளவு
திட்டக்குடி : திட்டக்குடி பகுதியில், பிரசார வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
லோக்சபா தேர்தல் வர உள்ளதையொட்டி, மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நேற்று தாசில்தார் ஜெயந்தி, தேர்தல் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன், உதவிஅலுவலர் லட்சுமணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
