ADDED : டிச 04, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: தினமலர் செய்தி எதிரொலியாக சாலையில் விழுந்த மின் கம்பம் சீரமைக்கப்பட்டது.
புவனகிரி ஒன்றியம், மருதுார் பகுதியில் மின் கம்பம் சாய்ந்து, ஒயர்கள் அறுந்து விழுந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.
இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், பு.உடையூர் மின்துறை ஊழியர்கள் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைத்து, பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது.

