/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
/
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடலுாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 05, 2024 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர், கருப்பு பேட்ஜ் அணிந்து கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் அந்தோணி ஜோசப், சிற்றரசன், தலைவர் குமரவேல், பொருளாளர் சங்கர நாராயணன் கண்டன உரையாற்றினர்.
இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக் கூடிய அரசாணையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

