/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கட்டுக்கம்பியால் கட்டிய அவசர வழி கதவால் ஆபத்து: சிதம்பரம் - சேலம் அரசு பஸ்சில் திக்... திக்...
/
கட்டுக்கம்பியால் கட்டிய அவசர வழி கதவால் ஆபத்து: சிதம்பரம் - சேலம் அரசு பஸ்சில் திக்... திக்...
கட்டுக்கம்பியால் கட்டிய அவசர வழி கதவால் ஆபத்து: சிதம்பரம் - சேலம் அரசு பஸ்சில் திக்... திக்...
கட்டுக்கம்பியால் கட்டிய அவசர வழி கதவால் ஆபத்து: சிதம்பரம் - சேலம் அரசு பஸ்சில் திக்... திக்...
ADDED : டிச 08, 2025 05:57 AM

விருத்தாசலம்: சிதம்பரம் - சேலம் அரசு பஸ்சில் அவசர வழி கதவு கட்டுக்கம்பியால் கட்டிய நிலையில் இருப்பதால், நெடுந்துார பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் அவலம் உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர் ஓட்டுக்களை கவரும் வகையில் மகளிர் விடியல் பயணம் என்ற பெயரில் பிங்க் நிற டவுன் பஸ்களை இயக்குகிறது.
இந்த பஸ்கள், ஆங்காங்கே பழுதாகி நிற்பதால் பயணிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பழுதான பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்காமல், நிறத்தை மட்டுமே மாற்றி இயக்குவது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில், விருத்தாசலம், வேப்பூர் வழியாக செல்லும், சிதம்பரம் - சேலம் அரசு நெடுந்துார பஸ்சில் (டி.என்.21 - என்.1467) பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை தொடர்கிறது. பஸ்சின் பின்புற இருக்கையின் வலதுபுறம் அவசர கால கதவு பொருத்தப்பட்டுள்ளது. இது, விபத்து போன்ற அசம்பாவிதங்கள் நிகழும்போது பயணிகள் வெளியேறும் வகையில் வைக்கப்பட்டது.
ஆனால், அவசரகால கதவின் லாக் பெயர்ந்து விட்டதால், இரண்டு சிறிய இரும்பு பட்டையை பொருத்தி, அதனை கட்டுக்கம்பியால் கட்டி பஸ்சை இயக்கி வருகின்றனர். பொதுவாக பஸ் சென்று கொண்டிருக்கும்போது, பின்புற இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணிகள், மேல்நோக்கி துாக்கி போட்டவாறு பயணிப்பது வழக்கம். அப்போது, கதவின் மீது பயணிகள் அல்லது ஏதேனும் பார்சல் மோதினால், கட்டுக்கம்பி அவிழ்ந்து, கதவு திறக்கப்பட்டு விடும்.
இது பின்னால் அமர்ந்திருக்கும் சிறுவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சிதம்பரம் - சேலம் நெடுந்துாரம் பயணிகளின் நலன் கருதி அவசர கால கதவினை புதிதாக பொறுத்த வேண்டும் அல்லது தாழ்ப்பாள் பொருத்தி பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

