/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரயில்வே கேட்டில் மேம்பாலம்: துணை சேர்மன் கோரிக்கை
/
ரயில்வே கேட்டில் மேம்பாலம்: துணை சேர்மன் கோரிக்கை
ரயில்வே கேட்டில் மேம்பாலம்: துணை சேர்மன் கோரிக்கை
ரயில்வே கேட்டில் மேம்பாலம்: துணை சேர்மன் கோரிக்கை
ADDED : டிச 08, 2025 05:57 AM

கிள்ளை: ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க துணை சேர்மன் கிள்ளை ரவீந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் திருமாவளவன் எம்.பி.,க்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கூறியிருப்பதாவது:
கிள்ளை ரயிலடியில், ரயில்வே நிலையம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து, இயங்கி வருகிறது.
கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை என இரு பேரூராட்சிகள், 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இதன் வழியாக சிதம்பரம் சென்று வருகின்றனர். பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் ரயில்வே கேட் வழியாக செல்கின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் வழியாக பயணிகள் ரயில், சரக்கு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் என அடிக்கடி சென்று வருவதால், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால், கிள்ளை ரயில்வே கேட்டில், மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

