/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
/
வேலைவாய்ப்பு முகாம் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : மார் 22, 2025 07:23 AM
கடலுார்; பெண்ணாடத்தில் இன்று நடக்க இருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
பெண்ணாடத்தில் இன்று நடக்க இருந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ள. முகாமில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன.
முகாமில், கடலுார் மாவட்டத்தைச் சார்ந்த 8 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இளைஞர்கள் பயன்பெறலாம்.முகாமில் பங்கேற்போர் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in-ல் பதிவு செய்து கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.