/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் வரும் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
/
கடலுாரில் வரும் 16ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
ADDED : மே 14, 2025 11:41 PM
கடலுார்: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் படித்த இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி நடக்கிறது.
கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாதம்தோறும் நடத்தப்படும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16ம் தேதி கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது. முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்து, உடனடியாக பணி நியமன ஆணை வழங்க உள்ளன.
வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் பங்கேற்கலாம்.
முகாமில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலுவலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்படமாட்டாது என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.