sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இன்ஜின் கோளாறு; மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

 இன்ஜின் கோளாறு; மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்

 இன்ஜின் கோளாறு; மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்


ADDED : ஜன 20, 2026 03:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 20, 2026 03:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்தில், இன்ஜின் கோளாறு காரணமாக நேற்று மாலை மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து தினசரி மாலை 4.30 மணிக்கு மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக மறுநாள் காலை மைசூர் சென்றடையும். நேற்று மாலை 4.30 மணிக்கு புறப்பட்ட வேண்டிய மைசூர் எக்ஸ்பிரஸ் இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. ரயில்வே அதிகாரிகள் பிரச்சினை சரிசெய்ய முடியாததால், விழுப்புரத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கிருந்த மாற்று ரயில் இன்ஜின் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மாலை 6.00 மணிக்கு கடலுார் துறைமுகம் ரயில் நிலையத்திலிருந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us