/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எருமனுார் சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
/
எருமனுார் சாலையோர குப்பையால் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 03, 2024 07:12 AM

விருத்தாசலம் எருமனுார் பாலத்தின் அருகே மர்மநபர்கள் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் - எருமனுார் சாலையில் பஸ், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த சாலையில் மணிமுக்தாற்று பாலத்தின் அருகே மர்ம நபர்கள் சிலர் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் மலைபோல் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், அப்பகுதியில் துார்நாற்றம் வீசுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, எருமனுார் மணிமுக்தாற்று பாலத்தின் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

