sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...

/

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...

சாமி வரம் கொடுத்தும் பூசாரி வரம் கொடுக்கலியே...


ADDED : நவ 04, 2025 09:47 PM

Google News

ADDED : நவ 04, 2025 09:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்பட்டாம்பாக்கத்தில் ஏரியை துார்வார பொதுப் பணித்துறை அனுமதி கிடைக்காததால் 'ஸ்பான்ஸர்' இருந்தும் பணி செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 66 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கு பெண்ணையாற்றில் இருந்து தண்ணீர் வர வரத்து கால்வாய் உள்ளது. ஏரி நிரம்பினால் சுற்றியுள்ள விவசாய நிலங்களில் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் மட்டம் உயர்ந்து விவசாயம் செழிக்கும். ஆனால் பல ஆண்டுகளாக ஏரியை துார்வாராததால் முட்புதர்கள் மண்டியுள்ளன.

முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான ஏ.எம்.எம்.அறக்கட்டளை சார்பில் ஏரியை துார்வார பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி நடவடிக்கை எடுத்தார். அறக்கட்டளை சார்பில் துார்வார சம்மதம் தெரிவித்தனர்.

பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஏரியை துார் வார தீர்மானம் நிறைவேற்றினர். வருவாய் துறை மூலம் ஏரியை அளவிடும் பணியையும் முடித்தனர். ஆனால் பொதுப் பணித்துறை மூலம் ஏரியை துார்வார அனுமதி கிடைப்பத்தில் தாமதமாகிறது.

அதனால் ஸ்பான்ஸர் கிடைத்தும் உரிய அனுமதி கிடைக்காததால் ஏரியை துார்வார முடியவில்லை. அதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக துார்வார அனுமதி அளிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us