நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைகழக பணி நிரவல் பிற்கால சந்தாதாரர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன், பொதுச் செயலாளர் சங்கர், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் ஆனந்த், ரவி, சரவணன் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வரையறுக்கப்பட்ட ஊழியர்களான தங்களை பணி நிரவலிருந்து விடுவித்து மீண்டும் பல்கலைக்கழக பணிக்கு அழைக்கா விட்டால் பதிவாளர் அலுவலகத்த்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

