நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், ; கடலுாரில் தமிழக அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ராமசாமி , மாநில பொருளாளர் அரிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வீராசாமி முன்னிலை வகித்தனர்.
ஓய்வூதியர்களின் குறைகளை கலெக்டர் அலுவலகம் முன்பாக அல்லது பொது இடங்களில் கூட்டமாக கூடி பேசி தீர்வுகாண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.