ADDED : ஏப் 26, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வள்ளி விலாஸ் ஆலயா மழலையர் பள்ளியில், இன்று (26ம் தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது.
கடலுார் வள்ளி விலாஸ் ஆலயா மற்றும் ஜோதி ஆரஞ்சு விஷன் கண் பராமரிப்பு மையம் இணைந்து முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கும் முகாமில், பொதுமக்களுக்கு கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கண்புரை உள்ளிட்ட கண் தொடர்பான நோய்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட உள்ளது.