ADDED : செப் 14, 2025 12:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் புதுச்சேரி ஜோதி ஐ-கேர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
நெல்லிக்குப்பம் பள்ளிக் கூட வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய சமுதாய கூடத்தில் நடந்த முகாமிற்கு பள்ளி தாளாளர் இந்துமதி சீனிவாசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் சீனுவாசன் வரவேற்றார்.
புதுச்சேரி ஜோதி ஐ-கேர் டாக்டர் லாவண்யா தலைமையிலான மருத்துவக்குழுவினர், முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.