நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் லட்சுமி சோரடியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஜோதி கண் பராமரிப்பு நிலையம் சார்பில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா முகாமை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, தலைமை ஆசிரியர் பத்தாகான் முன்னிலை வகித்தனர்.
முகாமில், 654 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில், 34 மாணவர் மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை பள்ளி ஒருங்கிணைப்பாளர் சித்ரா, ஆசிரியை ராஜேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

