ADDED : மே 05, 2025 06:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், பூச்சி மருத்து குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கருவேப்பிலங்குறிச்சி அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 36; இவரது மனைவி ரேவதி. இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. கடந்த 28 ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில், மனமுடைந்த திருநாவுக்கரசு வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உடன், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் ராஜ முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.