ADDED : ஏப் 25, 2025 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குறிஞ்சிப்பாடி: மனைவியுடன் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடுர்குப்பத்தை சேர்ந்தவர் தாமோதரன்,33; இவரது மனைவி சபிதா. தாமோதரன் அடிக்கடி குடித்து விட்டு வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன் தாமோதரன் குடித்து விட்டு வந்ததை மனைவி தட்டிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டது.
இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார். இதையடுத்து தாமோதரன் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். கடலுார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.