ADDED : ஜன 26, 2024 12:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே மினி லாரி மோதி சைக்கிளில் சென்ற விவசாயி இறந்தார்.
பரங்கிப்பேட்டை அடுத்த பெரியகுமட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன், 55; விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் பு.முட்லுார் சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பினார். கிளியாளம்மன் கோவில் அருகே வந்தபோது, மினி லாரி மோதியது. விபத்தில், நடராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

