ADDED : பிப் 03, 2024 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் -நெல்லிக்குப்பத்தில் ரயில் பாதையை கடக்கும் போது ரயில் மோதியதில் விவசாயி இறந்தார்
நெல்லிக்குப்பம் அடுத்த வெள்ளகேட்டை சேர்ந்தவர் ரவி,50; விவசாயி.இவர் நேற்று காலை பஸ் ஏறுவதற்காக அதே பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது மயிலாடுதுறையில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் ரவி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சிதம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இறந்த ரவிக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், பத்மகுமார்,அனிதா ஆகிய பிள்ளைகளும் உள்ளனர்.

