ADDED : ஏப் 02, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற விவசாயி, ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.
நெல்லிக்குப்பம் கீழ்பாதி இந்திரா நகரை சேர்ந்தவர் நாகமணி,62; விவசாயி. இவர், நேற்று காலை 11:45 மணிக்கு சைக்கிளில், ஆலைரோடு வழியாக வந்தார். அந்த நேரத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் வந்ததால், கேட் மூடப்பட்டிருந்தது.
ரயில வருவதற்குள் கேட்டை கடந்து விடலாம் என நினைத்து, நாகமணி அவசரமாக தனது சைக்கிளை தள்ளிக்கொண்டு கேட்டை கடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே நாகமணி உடல் சிதறி இறந்தார்.
இதுகுறித்து கடலுார் முதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

