நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் அருகே விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு சேப்ளாநத்தம் பகுதியை சேர்ந்தவர் மோகன், 58; விவசாயி.
இவரது வயலில், மணிலா பயிர் செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தனது மகன் பிரசன்னாவை, வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
பிரசன்னா மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த மோகன், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். அவரை மீட்டு புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று இறந்தார்.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

