/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : ஆக 28, 2025 02:14 AM
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு:
கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நாளை (௨௯ம் தேதி) காலை 10:30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்று கோரிக்கை குறித்து பேசலாம்.
பங்கேற்கும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8:00 மணிக்கு கூட்ட அரங்கில் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளை பதிவு செய்ய வேண்டும். கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பதில் அளிக்கப்படும்.