sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல் 

/

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல் 

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல் 

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு முன் விவசாயிகள் திடீர் மறியல் 


ADDED : ஜூன் 26, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூன் 26, 2025 01:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் மார்க்கெட் கமிடியில், வேளாண் விளைபொருட்களை எடைபோடாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் நேற்றும் வழக்கம்போல், விவசாயிகள் நெல், எள், மக்காச்சோளம் உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். தினசரி காலை 7:00 மணிக்கு வியாபாரிகள் வந்து எடை போடுவது வழக்கம். ஆனால், நேற்று காலை 9:30 மணி வரை வியாபாரிகள், வேளாண் அதிகாரிகள் வராததால், விளைபொருட்களை எடைபோட முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும், குறிப்பிட்ட காலத்தில் விவசாயிகள் விற்பனை செய்யும் வேளாண் விளைபொருட்களுக்கு பணம் போடாமல் வியாபாரிகள் இழுத்தடித்து வந்துள்ளனர். இதில், ஆத்திரமடைந்த விவசாயிகள், நேற்று காலை 9:45 மணியளவில் மார்க்கெட் கமிட்டி எதிரே விருத்தாசலம் - கடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், விருத்தாசலம் - கடலுார் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மேலும், இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us