sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இழப்பீடு கேட்டு உண்ணாவிரதம்

/

இழப்பீடு கேட்டு உண்ணாவிரதம்

இழப்பீடு கேட்டு உண்ணாவிரதம்

இழப்பீடு கேட்டு உண்ணாவிரதம்


ADDED : மார் 05, 2024 06:15 AM

Google News

ADDED : மார் 05, 2024 06:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில், தேசிய நெடுஞ்சாலை துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீடு கேட்டு முதியவர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் திருவள்ளூவர் தெருவை சேர்ந்தவர் சாலமோன், 70; இவர், கடலுார் காமராஜர் சிலை அருகில் நேற்று தனது குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது, சிதம்பரம் பரமேஸ்வரநல்லுாரில் உள்ள இடம், சாலை விரிவாக்கத்திற்காக தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. ஆனால், இழப்பீடு வழங்கவில்லை. 2017ம் ஆண்டு முதல் அதிகாரிகளிடம் மனு அளித்தம் நடவடிக்கை இல்லை. இதனால், இழப்பீடு கேட்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக சாலமோன் கூறினார்.

அவர்களை சமாதானம் செய்து கலெக்டரிடம் மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us