ADDED : அக் 04, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை :சிதம்பரம் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டியைச் சேர்ந்தவர் ஹலிகுர் ரஹ்மான், 51; இவரது, 17 வயது மகள் சிதம்பரம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 1ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, ஹலிகுர் ரஹ்மான் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.