ADDED : அக் 09, 2025 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: தந்தை மாயமானது குறித்து மகன் போலீசில் புகார் அளித்தார்
குள்ளஞ்சாவடி அடுத்த அயன் அகரம் பகுதியை சேர்ந்தவர் மாயவன், 70. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் கடந்த, 2ம் தேதி, சைக்கிளில் வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாயமான மாயவன் மகன் கோபிநாத், 38, குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.