ADDED : ஆக 06, 2025 07:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி, பாழ்வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன்,55; கூலித் தொழிலாளி. வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் சக்தி ஒளி அளித்த புகாரின் பேரில், ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து முத்துராமனை தேடி வருகின்றனர்.