ADDED : நவ 08, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வேலைக்கு சென்ற தந்தை காணாமல் போனது குறித்து, மகன் புகார் அளித்துள்ளார்.
கடலுார் அடுத்த பாதிரி குப்பம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன், 54; புதுச்சேரியில் காய்கறி கடை வைத்துள்ளார்.
கடந்த 6ம் தேதி மதியம், இளங்கோவனை அவரது மகன் பிரித்விராஜ், புதுச்சேரி செல்வதற்காக கடலுார் பஸ்நிலையத்திற்கு பைக்கில் கொண்டு வந்து விட்டுச்சென்றார்.
அதன்பின் இளங்கோவன் வீட்டிற்கு செல்லவில்லை. விசாரித்ததில் வேலைக்கும் செல்லவில்லை என தெரிந்தது. எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

