sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீராணம் ஏரியில் பொங்கும் நுரை ரசாயனம் கலந்ததா என அச்சம்

/

வீராணம் ஏரியில் பொங்கும் நுரை ரசாயனம் கலந்ததா என அச்சம்

வீராணம் ஏரியில் பொங்கும் நுரை ரசாயனம் கலந்ததா என அச்சம்

வீராணம் ஏரியில் பொங்கும் நுரை ரசாயனம் கலந்ததா என அச்சம்


ADDED : மே 04, 2025 05:25 AM

Google News

ADDED : மே 04, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : வீராணம் ஏரியில் தண்ணீரில் நுரை பொங்குவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடயில் துவங்கும் வீராணம் ஏரி, லால்பேட்டை வரை 14 கி.மீ., நீளம், 5 கி.மீ., அகலம் கொண்டது. ஏரி மூலமாக காட்டுமன்னார்கோவில், புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமராட்சி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா நெல் நடவு பருவங்களில் 54,000 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன. வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் தேவைக்காக தினமும் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 5 நாட்களுக்கு முன், வடவாற்றில் தண்ணீர் பச்சை நிறத்தில் வந்ததை தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்தை நிறுத்தினர்.

ஏரியின் முழு கொள்ளளவான 48.50 அடியில் தற்போது 44 அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ஏரியின் கரையோரங்களில் தண்ணீரில் நுரை பொங்கி காணப்படுகின்றது. ஏரியில் ரசாயனம் ஏதேனும் கலந்திருக்கலாம் என, விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதனால் ஏரி நீரை கால்நடைகள் குடிக்கவும், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீரை பயன்படுத்தவும் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்தாண்டு தண்ணீர் பச்சை நிறமாக மாறிய போது, சென்னை மாசு கட்டுப்பாடு மற்றும் தண்ணீர் ஆய்வு அதிகாரிகள் ஏரியில் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர். அதேபோன்று, மீண்டும் அதிகாரிகள் ஏரி தண்ணீரை ஆய்வு செய்து, விவசாயிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us