ADDED : செப் 18, 2024 09:44 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: புற்றுநோயால் பாதித்த பெண் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி ரேணுகாதேவி, 48. கர்ப்பப்பை புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்று வந்தார். அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 14ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
