/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சி பள்ளியில் ஐம்பெரும் விழா
/
நகராட்சி பள்ளியில் ஐம்பெரும் விழா
ADDED : ஏப் 18, 2025 04:52 AM

சிதம்பரம்: சிதம்பரம் மாலைக் கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஐம்பெரும் விழா நடந்தது.
குமராட்சி வட்டார கல்வி அலுவலர் நடராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர் பாஸ்கரன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சுமதி முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் அகிலா வரவேற்றார்.
நகராட்சி துணை தலைவர் முத்துக்குமார் வாழ்த்திப் பேசினார். தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் கடந்த கல்வி ஆண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில், 'திறன் வகுப்பறை' பள்ளியில் அமைக்கப்பட்டது.
ஆசிரியர்கள் ஜெயந்தி, தென்றல், ரேவதி, புனிதா, திருவேல்முருகன், தில்லைரங்கன், தீபலஷ்மி, மழலையர் பள்ளி ஆசிரியர் தீபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவிகள் மஹதி, யாழினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
லதா நன்றி கூறினார்.

