sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீயணைப்பு நிலையம் : கிராம மக்கள் எதிர்பார்ப்பு

/

தீயணைப்பு நிலையம் : கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தீயணைப்பு நிலையம் : கிராம மக்கள் எதிர்பார்ப்பு

தீயணைப்பு நிலையம் : கிராம மக்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஆக 08, 2025 02:25 AM

Google News

ADDED : ஆக 08, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் வருவாய் குறுவட்ட தலைமையிடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது. இதனைச் சுற்றி திருமலை அகரம், கோனுார், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனுார், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லுார், கொத்தட்டை, பெ.பொன்னேரி, கொசப்பள்ளம், முருகன்குடி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் கூரை வீடுகள் உள்ளன. கிராமங்களில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில், மீட்பு பணிக்காக 15 கி.மீ., துாரமுள்ள திட்டக்குடி, விருத்தாசலம் மற்றும் 20 கி.மீ., துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்துதான் தீயணைப்பு வீரர்கள் வர வேண்டும். அதற்குள் சேதம் அதிகமாவதுடன் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கிறது.

பெண்ணாடத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. தீ விபத்து காலங்களில் சேதங்கள் ஏற்படுவது மட்டும் தொடர்கிறது.

எனவே, பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us