/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிடாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
/
பிடாரியம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு பூர்த்தி விழா
ADDED : நவ 30, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி அடுத்த அழிச்சிக்குடி பெரியமேட்டில் எழுந்தருளியுள்ள பிடாரியம்மன் கோவில் முதாலாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது.
புவனகிரி அடுத்த அழிச்சிகுடி பெரிய மேட்டில் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் ஆத்ம திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமையில் விழா குழுவினர் புதிதாக கோவில் கட்டினர். இதற்கான கும்பாபிேஷக விழா கடந்த ஆண்டு நடந்தது. முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று முன் தினம் காலை சுப்ரபாததுடன் நிகழ்ச்சி துவங்கியது.
பின்னர் பல்வேறு பூஜைகள் நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தவள்ளி கலியமூர்த்தி, துணைத் தலைவர் இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.