sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்

/

 மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்

 மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்

 மனைப்பட்டா வழங்க கோரி மீனவர்கள் திடீர் போராட்டம்


ADDED : டிச 27, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 27, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்காததை கண்டித்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலுார், தேவனாம்பட்டினம் சுனாமி நினைவு துாணில் மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ஏகாம்பரம் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது, தேவனாம்பட்டினம் சுனாமி குடியிருப்பு மக்களுக்கு மனைப்பட்டா வழங்க பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்த வி.ஏ.ஓ., அனுராதா மற்றும் தேவனாம்பட்டினம் போலீசார், போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

வரும் 10ம் தேதிக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்து கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us