/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த மீன் வியாபாரி படுகாயம்
/
ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த மீன் வியாபாரி படுகாயம்
ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த மீன் வியாபாரி படுகாயம்
ஓடும் பஸ்சில் இருந்து விழுந்த மீன் வியாபாரி படுகாயம்
ADDED : நவ 23, 2024 06:23 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஓடும் அரசு பஸ்சில் இருந்து, பெண் தவறி விழுந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரங்கிப்பேட்டை அடுத்த புதுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தையல்நாயகி, 68; மீன் வியாபாரி. இவர், நேற்று சாமியார்பேட்டை - சிதம்பரம் அரசு டவுன் பஸ்சில், புதுக்குப்பத்தில் ஏறி சிதம்பரம் சென்றார். பஸ்சில் பின் பக்க படிக்கட்டுக்கு நேராக உள்ள சீட்டில் உட்கார்ந்திருந்தார்.
பஸ், சி.புதுப்பேட்டை கிராமம் அருகே வளைவில் திரும்பும்போது, தையல்நாயகி உட்கார்ந்திருந்த சீட்டு கழண்டு விழுந்துள்ளது. அப்போது, நிலை தடுமாறிய தையல்நாயகி பின் பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
உடன், அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் அரசு டவுன் பஸ்சில் இருந்து மீன் வியாபாரி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

