sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மணல் கடத்திய 5 பேர் கைது இரு வேன்கள் பறிமுதல்

/

மணல் கடத்திய 5 பேர் கைது இரு வேன்கள் பறிமுதல்

மணல் கடத்திய 5 பேர் கைது இரு வேன்கள் பறிமுதல்

மணல் கடத்திய 5 பேர் கைது இரு வேன்கள் பறிமுதல்


ADDED : மார் 19, 2025 04:37 AM

Google News

ADDED : மார் 19, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்: பெண்ணாடம் மற்றும் நடுவீரப்பட்டில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக இரு வேன்களை பறிமுதல் செய்தனர். மேலும், இருவரை தேடிவருகின்றனர்.

பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று இறையூரில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, மூட்டை களில் மணல் கடத்தி வந்த டி.என். 10 - பி.ஏ. 0018 பதிவெண் கொண்ட டாடா ஏஸ் வேனை பறிமுதல் செய்தனர். மேலும், வேனில் இருந்த, அரியலுார் மாவட்டம், அழகா புரம் மணிவேல், 28, இறையூர், அண்ணாநகர் சங்கர் மகன் பாரதிதாசன், 19, செல்வராஜ் மகன் குருராஜ், 22; ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய கொளஞ்சி மகன் மாதேஷ், செல்வம் மகன் சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

நடுவீரப்பட்டு


சப் இன்ஸ்பெக்டர் முகிலரசு மற்றும் போலீசார் நேற்று காலை சிலம்பிநாதன் பேட்டையில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, மணல் கடத்தி வந்த பி.ஒய்.01 பிபி7444 பதிவெண் கொண்ட மகேந்திரா பிக்அப் வேனை மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும், வேனை ஓட்டி வந்த திருக்கண்டேஸ்வரம் குமார், 42; பி.என்.பாளையம் திருநாவுக்கரசு, 48; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us