sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடராஜர் கோவிலில் ஜன. 4ல் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

/

நடராஜர் கோவிலில் ஜன. 4ல் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

நடராஜர் கோவிலில் ஜன. 4ல் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

நடராஜர் கோவிலில் ஜன. 4ல் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்


ADDED : ஜன 02, 2025 07:18 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், வரும் 4ம் தேதி, ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன விழா நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, வரும் 4ம் தேதி காலை 6:15 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

அன்றைய தினம் காலை 5:00 மணிக்கு நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர்.

13ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் 6:00 வரை, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது.

தொடர்ந்து திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விஷேக ரகசிய பூஜையும் நடைபெறும்.

மாலை 3:00 மணிக்கு மேல், நடராஜரும், அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us