/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் வனத்துறை பயிற்சி முகாம்
/
நெய்வேலியில் வனத்துறை பயிற்சி முகாம்
ADDED : மார் 11, 2024 06:35 AM

நெய்வேலி : நெய்வேலியில் விருத்தாசலம் வனத்துறை சார்பில் வருகின்ற கோடை காலத்தை முன்னிட்டு கடலுார் வனக்கோட்டத்தின் வனப்பணியாளர்களுக்கான தீ தடுப்பு முறைகள் மற்றும் கோடைகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் முறைகளை பற்றி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
கடலுார் மாவட்டம் நெய்வேலி வனவியல் விரிவாக்க மையத்தில் நடந்த தீ தடுப்பு பயிற்சிக்கு விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமை தாங்கினார்.
கடலுார் வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி, தலைமையிலான உதவி வனபாதுகாவலர் இக்பால், கடலுார் வனச்சரக அலுவலர் ரமேஷ், முத்தாண்டிகுப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி வனச்சரக அலுவலர், கடலுார் சிதம்பரம் பிச்சாவரம் புயல்தடுப்பு வனச்சரகங்களை சார்ந்த வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வனத்தீயை அணைப்பதற்குண்டான நவீன உபகரணங்கள் பற்றி விளக்கிக் கூறப்பட்டு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறை சார்பாக தீயை அணைக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூறப்பட்டது.

