/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி
/
மின்கம்பியை மிதித்து நான்கு மாடுகள் பலி
ADDED : செப் 25, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூன்று பசுமாடுகள், ஒரு கன்றுகுட்டி இறந்தது.
கடலுார் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் ஊராட்சி, நாகம்மாள்பேட்டையைச் சேர்ந்தவர் கருணாகரன்,48. இவருக்குச் சொந்தமான மூன்று பசு மாடுகள், ஒரு கன்று நேற்று மாலை செம்மங்குப்பத்தில் உள்ள காலி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மாடுகள் மிதித்ததில் கன்றுவுடன் ௩ மாடுகளும் இறந்துவிட்டன. கடலுார் முதுநகர் போலீசார் விசாரித்து வரு கின்றனர்.