/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை
/
வேலை கிடைக்காத விரக்தி; வாலிபர் தற்கொலை
ADDED : நவ 13, 2024 09:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் ; கடலுாரில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் திருப்பாதிரிபுலியூர், ராஜம் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் விக்னேஷ்வரன், 27; பி.டெக்., பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்ற மனவருத்தத்தில் இருந்தார்.
நேற்று மதியம் விரக்தியில் வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

