ADDED : அக் 14, 2024 08:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே காசு வைத்து சூதாடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டி பனை தோப்பில் காசு வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சூாதடிய அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன், 48; செந்தாமரை, 48; சந்திரசேகரன், 50; வீரப்பன், 58; ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

