ADDED : நவ 17, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே கஞ்சா பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சஞ்சீவிராயன்கோவில் மலை பகுதியில், கடலுார், வண்டிப்பாளையம் சாலையை சேர்ந்த ஆறுமுகம் மகன் குபேரகிருஷ்ணன்,23;கஞ்சா விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தார்.
நடுவீரப்பட்டு போலீசார் குபேரகிருஷ்ணனை கைது செய்து,அவரிடமிருந்த 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

