ADDED : டிச 14, 2024 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: வடலுார் அருகே மின்சாரம் தாக்கி 10 வயது சிறுமி இறந்தார்.
வடலுார் அடுத்த தென்குத்து பின்னாச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் லக்சயா,10; தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர், நேற்று காலை வீட்டில் பேன் சுவிட்ச் போடும் போது, மின்சாரம் தாக்கி மயக்கமடைந்தார். உடன் அவரை வடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.
இதுகுறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

