ADDED : டிச 06, 2025 06:32 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் நடத்திய வினாடி வினா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வாழங்கப்பட்டன.
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக்குழுமம் இணைந்து, விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 'பதில்சொல், பரிசுவெல்' வினாடி வினா போட்டி நடத்தியது.
போட்டியில் 250 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதிச்சுற்று நடந்தது.
இந்த போட்டியில், 9ம் வகுப்பு மாணவர்கள் பிரவீன்குமார், நிதிலன் முதலிடம்; 7 ம் வகுப்பு மாணவர்கள் முகமது அப்சர், ரசுல் ஆகியோர் இரண்டாமிடம் பிடித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கி, போட்டியில் வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயராணி, விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி அளவில் வெற்றிபெற்ற இரு அணிகளும், மெகா வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வாகினர்.

